Translate

Friday, 5 April 2013

ஜாதகம் - ராசி லன்
by J.K. Sivan

அந்த குழந்தை பிறந்தபோது, அதை கொஞ்ச யாரும் வரவில்லை. இரவோடு இரவாக அதை தாயிடமிருந்து பிரித்தாகிவிட்டது. பிறந்ததே வெளியே தெரியாதபோது பிறந்ததை யார் கொண்டாட முடியும்?. வளர்ந்ததும் எங்கோ! . அதற்கு ஜாதகம் பார்த்தார்களா?

நல்ல நாள் பார்த்து பேர் வைத்தார்களா? கருப்பழகன் ஊரில் யாராலும் கிருஷ்ணன் என்றே அழைக்கபட்டான். அதெல்லாம் சரி, இதற்காக அவனுக்கு ஜாதகம் என்று ஒன்று
இல்லாமலா போய் விடும். அவன் பிறந்த நாள், நேரம் எல்லாம் சரியாக தெரிந்ததால் அதை வைத்து கொண்டு பல ஜோசியர்கள் கணித்தது அவன் வாழ்க்கையை படம் பிடித்து காட்டி விட்டதே! அவன் ஏன் மற்றவர்களை விட வித்யாசமாக இருந்தான்??அவன் ஏன் ஒரு காந்த சக்தியாக இருந்தான்

கண்ணற்ற சூர்தாசை கேட்டால் அவர் கவிதை ரூபமாகவே அவன் ஜாதகத்தை பாடிவிடுகிறார்!.

பிறந்த நாள்: மதுராபுரியில் ( (27*25’ North; 77*41’ East) ஜூலை 19, 3228 (கி.மு) நடு ராத்திரி. கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆவணி மாசம் ரோகிணி நக்ஷத்ரம். இந்த கிருஷ்ணன் பிறந்த குறிப்பு கொடுத்தது நானல்ல ஸ்ரீ வியாச மகரிஷி.பாகவதத்தில்.

யார் இந்த ரெண்டு ஜோசியர்கள் ரொம்ப ஆர்வமுடன் கிருஷ்ணன் ஜாதகத்தை அசுகிரார்களே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாக காதில் விழவில்லை என்றாலும் ஏதோ காதில் விழுந்தவரை அவர்கள் பேசும் ஜாதக பாஷை நமக்கு தெரியாததாலும் காதில் பட்டதை கை எழுதுகிறது. தப்போ ரைட்டோ அவரவர்தேவைக்கு ஏற்றபடி எடுத்து கொள்ளுங்கள். நமக்கு தெரியாததில் நமது நீளமில்லாத மூக்கு நுழையாது.

நாணா, நான் அப்பவே சொன்னேனோல்லியோ. இதோ பார் எப்படி கரெக்டா அமைஞ்சிருக்கு இந்த ஜாதகன் பெரும் புத்திசாலி, பேர் அழகன், பெரிய செல்வந்தன், மாணிக்கம், மரகதம், வைரங்கள் ஜொலிக்கும் 16000 மாளிகைகளாம் அவனுக்கு!

சுப்புணி நீ சொன்னது சொன்னது எல்லாமே அவன் செல்வத்தின் துக்குணியூண்டு என்றால் பார்த்துக்கோ!
சுப்புணியும் நாணாவும் மாற்றி மாற்றி அலசுவதில் யார் எதை சொன்னார் என்று நான் கவனிக்கவில்லையே. அவர்கள் பேசியது காதில் விழுந்தவரை இது:- எல்லா கிரகங்களும் அவன் சொற்படியே கேட்கும். தியாக செம்மல். அவன் ஒரு தனிப்பிறவி. இறைவனின் மானுடஉரு.

அன்பை தருவதிலும் தானே அதுவாகவும் ஆனவன். அவன் ரிஷப ராசிக்காரன்யா!! . லக்னாதிபதி சுக்ரன்! கேக்கணுமா?” ரோஹிணி நக்ஷத்ரம் வேறே! . சந்திரன், சனி, அங்காரகன் எல்லாம் உச்சத்திலே இருக்கா. அவா அவா கிரகத்திலே சூரியன், குரு, புதன் உக்காந்திருக்கா. ரிஷப ராசியிலே லக்னத்தில் சந்திரன் அக்கடான்னு இருந்தா ஜாதகன்,அழகனா, பேரும் புகழுமா ஆள் மயக்கியா, செல்வத்திலே புரளாம என்ன பண்ணுவான்? ஒண்ணாம் மடத்திலே கேதுங்கிறதாலே கொஞ்சம் அதிகமாவே கேளிக்கை உண்டு. அபவாதங்களும் கூட!.

3ம் வீட்டிலே செவ்வாய் நீச பங்கனா இருக்கான் என்கிறதாலே ஆசாமி யுத்தத்திலே படு தைர்யசாலி! ரோகிணி அழகி, சந்திரனை ஆக்ரமித்தவள். எனவே சந்திரனும் ரோஹிணியும் சேர்ந்த ஜாதகன் அழகனாக ஆள் மயக்கியாக இருந்ததில் என்ன அதிசயம்?. ரிஷபத்துக்கு பசு நேசம் உண்டே!! இந்த ராசிக்காரன் பசுக்களிடையே பிரபலமானவன் இதனால் தானோ?? 6ல் புதன், 10ல் சனி பிரதானமாக இருந்து ஜாதகன் தர்ம ஞாயத்தில் ஸ்ட்ராங்காக இருக்க உதவியிருக்கிறான்.

அங்காரகன் ராஹுவுடன் சேர்க்கையால் ஜாதகன் ராஜதந்திரி. இதை கேளுய்யா!! ரெண்டுலே உடைமையானவன் புதன்; படு ஜோரா 5ல் இருக்கான். அதனாலே வாய்லே ருந்து வர வார்த்தை எல்லாம் முத்துன்னா முத்து தான். பேச்சிலே மயங்காதவா புத்திசாலித்தனத்தால் அடிமையாகாதவா கிடையாது. இதை பாரு. சூரியன் தன்னுடைய வீட்டிலே குருவோட ஸ்வஸ்தமா இருக்கான். எதிரிகள் பொடிப் பொடி!! ஆசாமியை அசைக்க முடியாது. இது என்ன வேடிக்கை!

7ம் வீட்டுக்கு சொந்தக்காரன் அங்காரகனோடு களத்ரகாரகன் சுக்ரன் சேர்ந்துட்டதாலே மனைவிகள் கொஞ்சம் ஜாஸ்தி தான். பரவாயில்லை!! ஏன்னா, ராகு பக்கத்திலேயே இருக்கான். தெய்வீக உறவுதான். 9லே, அதான், சனியோட இடத்திலே, கேது இருக்கான்.

யோககாரகனா சனி 7ல் இருந்துண்டு வெற்றி மேலே வெற்றியா தரான். யுத்தத்திலே ஜாதகனை அடிச்சிக்க ஆளு கிடையாது. புரியறதா?? சனி தான் ஆயுள் காரகன், வர்கோத்தமன் ஆச்சே. ஆசாமிக்கு பூரண வயசு. கிருஷ்ணன் தான் 125வயசு இருந்தானே

இதெல்லாம் கிருஷ்ணனுடைய ஜாதக பலன். இன்னுமிருக்கு நிறைய சொல்ல. நேரம் தான் இல்லை. இங்கே இடம் தான் இல்லை எழுத!!. எல்லாத்துக்கும் காரணமான தெய்வத்தின் ஜாதகத்தில் எல்லாமே இருப்பது ஆச்சர்யமா!
 
நாணாவும் சுப்புணியும் சொல்லாவிட்டாலும் நமக்கு நன்றாக தெரியும் இந்த மனித தெய்வம் வாழ்ந்த காலத்தில் கூடவே இருந்தவர்கள்,பார்த்தவர்கள் பேசியவர்கள் கேட்டவர்கள் மிக புண்ய சாலிகள் என்றாலும் இன்றும் அந்த தெய்வத்தின் படத்தை வணங்கியோ, பெயரைச்சொல்லியோ, கதையை கேட்டோ மகிழும் நாம் ரொம்ப ரொம்ப பாக்யவான்கள், அவர் அருளை பெற்று பயனடைபவர்கள் என்பதற்கு ஜோசியம் வேண்டாம்!





The writer can be reached at: jksivan@gmail.com 

 

Thursday, 4 April 2013

Hare Krishna Maha-mantra for
 
Spiritual Renaissance
 



At the same time of the so called Renaissance in Europe, the real renaissance of Lord Caitanya was taking place in India. Lord Caitanya taught that simply by chanting the holy names of God, dancing in ecstasy, and feasting on sumptuous Krishna prasadam one can achieve the supreme perfection of going back to home, back to Godhead. He completely revolutionized the India sub-continent with the chanting of the Hare Krishna mantra:

Hare Krishna Hare Krishna
Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama 
Rama Rama Hare Hare 

His spiritual renaissance was then distributed all over the world by His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada through the medium of ISKCON, the International Society for Krishna Consciousness, which is now in the process of completely revolutionizing the entire human society.

***
Krishna is the Param Brahma

If we are going to have actually solidity and certainty we must hear directly from God, without any distortion, as to what is the Absolute Truth.

Out of His sweet kindness the Lord personally appeared on this material plane of existence 5,000 and carefully and clearly revealed what is the Absolute Truth to His most beloved disciple, Arjuna. After hearing Krishna's or God's revelation of the most confidential knowledge,
Arjuna said to Krishna:

param brahma param dhama
pavitram paramam bhavan
purusam sasvatam divyam
adi-devam ajam vibhum

"You are the Supreme Personality of Godhead, the ultimate abode, the purest, the Absolute Truth. You are the eternal, transcendental, original person, the unborn, the greatest."

Bhagavad-gita 10.12

***

Monday, 1 April 2013

Chant Hare Krishna for All Success




The Bhagavad-gita is the highest knowledge, it is the highest and most direct and clear knowledge ever revealed in the vast history of eternity. If you will read it carefully and seriously apply its principles, you will truly become one of the happiest, most spiritually perfect beings that has ever existed.

It doesn't matter who you are, where you live, what your gender or age is, or what your age or occupation is. This ultimate science known as Krishna consciousness is the universal science of the soul. It is fully applicable to all persons in all times, places, and circumstances.


If you will take it seriously, we will absolutely guarantee your success no matter how disqualified you consider yourself to be. All you have to do if you want to be successful is take up the regular chanting of the Hare Krishna mantra:

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare


***

துவந்த யுத்தம்
by J.K. Sivan

மகாபாரதத்தை பற்றி எல்லோருக்குமே தெரிந்த ஒரு உண்மையை பற்றி முதலில் பேசுவோமா? யாருக்கு தெரியாது பாண்டவர்கள் கவுரவர்கள் யுத்தம்!. காலம் காலமாக தலைமுறை தலை முறையாக நிறைய கேட்ட, படித்த, பார்த்த கதை தானே அது. இருந்தாலும் ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் கேட்கும்போதும் அலுப்பே தட்டவில்லையே!! அதற்கு எங்கு ஆரம்பிக்க வேண்டும் எங்கு நிறுத்த வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. இதற்கு முக்ய காரணம் அதில் நடமாடும் கிருஷ்ணன்!! அவன் எங்கும் எதிலும் இருப்பவனாயிற்றே. எங்கு ஆரம்பித்தாலும் அதில் அவன் இருப்பதால் அதுவே ஆரம்பம். இந்த வகையில் தான் கிருஷ்ணன் கதைகள் உங்களை வந்தடைகிறது. ஒவ்வொரு சம்பவமும் மனதை குளிர்விக்கிறது.
அவன் பாதார விந்தங்களில் சரணாகதி அடைய வைக்கிறதே. இன்றைய கதையில் கிருஷ்ணன் பங்கு என்ன என்பதை அடுத்து வரும் பாராக்கள் தானே விளக்கட்டும்.

கவுரவர்கள் சேனை அழிந்தது துரியோதனனின் 99 சகோதரர்களும் அவர்களை சார்ந்தவர்களும் தொலைந்தனர். துரியோதனன் துளிக்கூட அவர்களுக்காக வருந்தவில்லை. கர்ணனை மலைபோல் நம்பி அவனும் மாண்டபிறகு இனி வெற்றி என்கிற பேச்சுக்கே இடமில்லை. தான் எப்படி மரணத்தை நேர் கொள்ளவேண்டும் என்று யோசித்துக் கொண்டே ஒரு ஏரிக்குள் ஒளிந்துகொண்டிருந்தான். கிருபர், அஸ்வத்தாமா, ஆகியோர் அவனை கிளப்பி "துரியோதனா, நீ ஒரு வீரன். கலங்காதே. உனக்கு ஒரு வழி இருக்கிறது இன்னும் கூட" என்று ஐடியா சொன்னதால் வெளியே வந்தான். அவர்கள் சொன்னபடி நேரே யுதிஷ்டிரனிடம் வந்தான்.
துரியோதனா, உனக்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் கொடுக்கிறோம், எங்களில் ஒருவனோடு நீ தனியாக துவந்த யுத்தம் செய். அதில் நீ வெற்றி பெற்றால் நீயே ஜெயித்தவன். உயிர் பிழைத்து தனியாக வாழ். அன்றேல் மரணத்தில் உன் சகோதரர்கள் நண்பர்களை சந்திக்கலாம். யாருடன் மோதுகிறாய்?"

துரியோதனன் வீரன். அந்தகால க்ஷத்ரியன். தனக்கு சம பலம் உடைய பீமனையே அவன் தேர்ந்தெடுத்தான் இருவருமே பலராமனிடம் கதை பயிற்சி பெற்றவர்களாச்சே. இருவரில் உயிருக்காக போராடுபவன் என்கிறபோது துரியோதனன் கை ஓங்கியிருப்பது வாஸ்தவம். துரியோதனனை எளிதில் பீமனால் வெல்ல முடியவில்லை என்பதை கிருஷ்ணன் கவனித்து விட்டான். பீமனை உற்சாகப்படுத்தி கொண்டிருந்த கிருஷ்ணன்
சில சமிஞ்ஞைகள் செய்தும் பீமன் புரிந்து கொள்ளவில்லை

பீமா, சபாஷ் நன்றாக யுத்தம் செய்கிறாய் என்று உரத்த குரலில் கிருஷ்ணன் அவனை ஊக்குவித்து தனது தொடையை கையால் தட்டிக்கொண்டே இருந்தான். பீமனுக்கு இப்போது கொஞ்சம் பொறி தட்டியது. திரௌபதியை மான பங்கப்படுத்த அவளை தனது தம்பி துச்சாணனை விட்டு இழுத்து வர செய்து அவளைத் தொடையில் வந்து உட்கார்என்று அகங்காரத்தோடு துரியோதனன் சொன்னபோது, “துரியோதனா, எங்கள் குல விளக்கு திரௌபதியை உன் தொடையில் வந்து அமர் என்று சொன்ன உனது தொடைகளை பிளக்காவிட்டால் நான் பீமன் இல்லை" செய்த சபதத்தைத் தான் கிருஷ்ணன் ஜாடையாக உணர்த்துகிறான் என்பது பீமனுக்கு ரொம்ப லேட்டாக புரிந்தது.
தனது கதையால் துரியோதனனது தொடையை பிளந்தான். துரியோதனுடைய வீக் பாயிண்ட் அது. இந்த சமயம் உங்களோடு ஒரு ரகசியத்தை பங்கிட்டு கொள்கிறேன். துரியோதனன் தாய் காந்தாரி தன் கண்களை தானாகவே கட்டிக்கொண்டு அவளது கணவன் திருதராஷ்டிரன் போலவே தானும் குருடியாகவே வாழ்பவள். அவள் தன கண்களை திறந்து எவரை பார்த்தாலும் அவர்களுக்கு வஜ்ரம் இரும்பு போல தேகம் பலமடையும் என்று ஒரு வரம்.

தன் மகன் துரியோதனன் முழு உடம்பும் இரும்பு வஜ்ரம் போல் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு தரம் அவனை பிறந்தமேனியாக தன் எதிரே வர சொன்னாள். கிருஷ்ணனுக்கு இந்த விஷயம் தெரியும். துரியோதனனிடம் சென்றான். "பெற்ற தாயாக இருந்த போதிலும் பிறந்த மேனியாக ஒரு பெண் முன் நிற்பது அநாகரிகம் என்று இடுப்பிலிருந்து முழங்கால் வரை மறைத்து கொண்டு அவன் காந்தாரி முன் நிற்க செய்தான். ஆகவே காந்தாரியின் பார்வை துரியோதனன் உடல் மீது பட்ட இடத்தில் அவனை எந்த ஆயுதமும் ஒன்றும் செய்ய முடியாது. அவன் மறைத்திருந்த தொடை பகுதியில் அதற்காகவே பீமனை கதையால் தாக்க கிருஷ்ணன் சமிஞை செய்ததை புரிந்து கொண்டதால் துரியோதனை தொடை பிளந்து கொன்றான்

இது அதர்மம். இடுப்புக்கு கீழே அடிப்பது நேர்மையல்லஎன்று அஸ்வத்தாமன் கத்தினான்.
நீங்கள் எதை நேர்மையாக செய்தீர்கள்என்று அர்ஜுனன் கேட்டான்.

துர்யோதனன் நாம் இப்போது சொல்கிறோமே "ஸ்பாயில்ட் சைல்ட்" அது மாதிரி செல்லம் கொடுத்து கெட்டுப்போன ஒருவன். பொறாமை அவனது இயற்கை குணமாக இருந்தது. ஆனால் அவன் ஒரு சிறந்த நண்பன். சகோதர பாசம் உடையவன். சமயோசிதம் தெரியவில்லை. அகம்பாவத்தால் அறிவிழந்த ஒரு பலம் கொண்ட அரசன். கிருஷ்ணனால் கூட திருத்த முடியாத ஒரு ஜீவன். கிருஷ்ணன் புன்னகைத்தான்.

துரியோதனன் உயிர் இழந்தான்.


                                                   The writer can be reached at: jksivan@gmail.com
 
Let us not remain fools!



All of us here in this material world are the biggest fools because we traded our most wonderful eternal, all blissful existence in the spiritual sky for a miserable, ignorant semi-existence here in the cycle of birth and death in this material world.        

Krishna has come to save us from our foolishness by delivering the teachings of the Bhagavad-gita. So let us not remain fools. Let us take His teachings seriously and get out of this ridiculous place.

***