Translate

Sunday, 17 March 2013

Krishna says: "I am waiting for you"




Krishna played His flute to call Radharani and the gopis. Since Radharani and the gopis are already there with Krishna, Krishna does not need to play the flute. So why is He playing it? He is playing his flute TO CALL US. His flute sings a song that goes something like this: "Come home. I am waiting for you. Stop putzing around. What are you doing that's so important?"

In other words, He only acts to help us re-establish our relationship with Him. He performs His pastimes to awaken our love for Him. Try to feel this affection when you hear His lilas; try to feel Him calling you into a relationship with Him.

When you read the Bhagavatam, you can hear Krishna saying: "Please accept my love. Please join me in my eternal lila."

***
Sri Chaitanya Mahaprabhu


About 5000 years ago, Lord Sri Krishna appeared in Vrindavana, near Mathura City. He established the principles of religion by killing great demons like Kamsa and by speaking the superlative knowledge of the Bhagavad-gita. That was in Dvapara-yuga, but the yuga has since changed; we are now in kali-yuga – the age of rapid decline of spiritual standards.
 
To re-establish the highest religious principles, just 500 years ago, the Supreme Lord Sri Krishna once again descended to this world, this time appearing in Mayapur, West Bengal, in his eternal golden form of Sri Chaitanya Mahaprabhu.
***
விட்டலன் கதை 34

கஜானா காலி
by J.K. Sivan
 

 
 
இன்றைய கதையில் வரும் தாமாஜி பற்றி தெரியாவிட்டால் ஒன்றும் தப்பில்லை. பத்ராசலம் ராமதாசரை பற்றிய கதை தெரிந்தால் ராமதாசர் என்ற பெயரை மாற்றி, தாமாஜி என்று மனதில் கொள்ளலாம். ஏனென்றால் கதை கிட்டத்தட்ட அதேபோல் தான் உள்ளது.

மங்களவேடா என்ற ஊர் பண்டரிபுரத்திலிருந்து ரொம்ப தூரத்தில் உள்ளது. அந்த ஊரில் தான் தாமாஜி, பீடார் சுல்தானுக்கு வரி வசூல் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நமது கதா நாயகனாதலால், விட்டல பக்தர் என்று சொல்லவேண்டியதில்லை. தினமும் விட்டலனை பூஜித்து யாரேனும் அதிதி வந்தால் அவருக்கு போஜனம் செய்வித்து, பிறகு தான் சாப்பிடுவார். சுல்தானுக்கு அவரது நேர்மை, நல்லொழுக்கம் எல்லாம் ரொம்ப பிடித்துவிட்டது. சுல்தானின் கஜானா மற்றும் பண்டக சாலைக்கும் பொறுப்பாளி இப்போ தாமாஜி தான்!
 
எதிர்பாராத விதமாக நாட்டில் பஞ்சம் வந்தது. ஆடு மாடு கோழி எல்லாம் தீவனமின்றி மெலிந்து இறந்தன. பயிர், பச்சை எல்லாம் வாடிக் கருகியது. மக்கள் உணவு தட்டுப்பாட்டால் தவித்தனர். ஒருநாள் தாமாஜி வீட்டு வாசலில் ஒரு பிராமணர் பசியோடு வந்தார். தாமாஜி அவரை அழைத்து உபசரித்து தன்னருகே அமர்த்தி உணவளித்தார்.

அந்த மனிதர் அழத்தொடங்கவே தாமாஜி விவரம் கேட்டார். "நான் இங்கே வயிறார உண்கிறேன். பண்டரிபுரத்தில் என் வீட்டில் மனைவி குழந்தைகள் உணவின்றி தவிக்கிறார்களே என்று நினைத்தேன் அழுகை வந்தது" என்றார்.

ஒரு வண்டியில் சில அரிசி பருப்பு மூட்டைகளை ஏற்றி தாமாஜி அந்த பிராமணரோடு ஊருக்கு அனுப்பினார். பண்டரிபுரம் எல்லை தாண்டுவதற்குள் நிறையப்பேர் அவர் வண்டியை மடக்கி, மூட்டைகளை பிய்த்து, ஆளுக்கு கொஞ்சமாக எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். "எப்பிடி சாமா, உனக்கு இதெல்லாம் கிடைத்தது என்று கேட்டபோது அவர் சுல்தானின் அதிகாரி தாமாஜி பற்றிச் சொன்னார்.

சிலர் உடனே கிளம்பி மங்களவேடா ஊருக்கு வந்து தாமாஜியை பார்த்து பண்டரிபுரத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுவது பற்றிச் சொன்னார்கள். தாமாஜி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. பண்டக சாலையிலுள்ள எல்லா உணவுப் பொருள்களை எல்லாம் காலி செய்து பண்டரிபுரம் அனுப்பிவிட்டார்.

அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. சுல்தானின் உள்ளூர் அதிகாரியாக பண்டரிபுரத்தில் இருந்த மஜும்தார் மிகவும் ஆத்திரமடைந்தான். தாமாஜியின் செயல் அவனை கோபமடையச்செய்தது. நீண்ட கடிதம் சுல்தானுக்கு எழுதினான். சுல்தானால் நம்பமுடியவில்லை. தாமாஜியா இப்படிச் செய்தார்? விசாரணையில் இது உண்மையென்று தெரிந்ததும் ஆளை அனுப்பினான்.

"பண்டக சாலையில் இருந்த பொருள்களையோ அவற்றுக்கான பணமோ உடனே திரும்ப தரவேண்டும், இல்லையேல் சிறை பிடித்து அழைத்துவாருங்கள் அந்த தாமாஜியை" .கட்டளையோடு தாமஜியிடம் வந்தார்கள் சுல்தான் வீரர்கள்.

"என்னை சிறைபிடித்துச் செல்லுங்கள் என்னிடம் ஒன்றுமில்லையே" என்றார் தாமாஜி. அழைத்துச் சென்றார்கள் வீரர்கள் கால்நடையாக பீடாருக்கு. போகும் வழியில் பண்டரிபுரம் விட்டலன் கோவில் அருகே தாமாஜி வீரர்களிடம் "ஒரு நிமிஷம் பாண்டுரங்கனை தரிசித்து வந்துவிடுகிறேனே" என்று கெஞ்ச, அனுமதி கிடைத்தது.

ஓடினார் விட்டலனிடம். "இது தான் நான் உன்னைக் கடைசியாக தரிசனம் செய்வது. சுல்தான் எனக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்க போகிறான்". முடிந்தால் அடுத்த ஜன்மத்தில் சந்திப்போம்" என்று வேண்டினார்.

பீடாரில் சுல்தான் எதிரில் விட்டோநாயக் என்று ஒருவரைக் கொண்டு நிறுத்தினார்கள் அவன் அரண்மனைச் சேவகர்கள். விட்டோநாயக் சுல்தானிடம் ஒரு கடிதம் கொடுத்தான். அத்துடன் ஒரு பை நிறைய பொற்காசுகளும் கொடுத்தான். பையின் மேல் சுல்தானின் அதிகார முத்திரை இருந்தது. மங்கள வேடாவிலிருந்து வந்திருக்கிறது. "பண்டக சாலையிலிருந்த பொருள்களை அதிக விலைக்கு விற்ற லாப தொகை போக பண்டக சாலையில் வேண்டிய சாமான்களும் இருக்கிறது. பெற்றுக்கொண்டு ரசீது அனுப்பவும் " என்று தாமாஜி கைப்பட எழுதிய கடிதமும் பணமும் கண்ட சுல்தான் தாமாஜியை பற்றி அவதூறாகக் கூறிய மஜூம்தாரைக் கைது செய்ய ஆணையிட்டான். விட்டோனாயக்கிடம் ரசீதும் கொடுத்தான். வீரர்கள் புறப்பட்டனர்.

பண்டரிபுரத்திலிருந்து வீரர்கள் தாமஜியை கட்டி இழுத்து பீடாருக்கு வந்தனர். சுல்தான் முன்னால் நிறுத்தினர். சுல்தானுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. அவர்களை திட்டி, கட்டுகளை அவிழ்க்கச் சொன்னான். ஓடி வந்து தாமாஜியை அணைத்துக் கொண்டான்.

"என்னை மன்னித்துவிடுங்கள் தாமாஜி. மஜும்தார் பேச்சைக் கேட்டு உங்களை அவமதித்துவிட்டேன். உங்கள் நேர்மை எனக்கு தெரிந்தும், இவ்வாறு செய்தது என் தவறு. உங்கள் சேவகன் விட்டோனாயக்கிடம் பணத்துக்கு ரசீது தந்துவிட்டேன்" என்றான் சுல்தான்.

தாமாஜிக்கு தலை சுற்றியது. சேவகனா? விட்டோநாயக்கா? பணமா? ஒன்றுமே புரியவில்லையே!
"நவாப்! நான் அரசாங்க பொருள்களை எடுத்து தானம் செய்தது உண்மை. என்னிடம் பணமே இல்லை. எனக்கு யாரும் சேவகன் இல்லை. விட்டோநாயக் என்று யாரையுமே எனக்கு தெரியாது"

"என்னய்யா உளறுகிறீர் இதோ பாரும் நீர் கைப்பட எழுதிய கடிதம். இதில் என்னுடைய அரசாங்க முத்திரை குத்தியிருக்கிறீர்களே."

கடிதம் பார்த்ததும் புரிந்தது தாமாஜிக்கு. விட்டலனின் விளையாட்டு தெரிந்தது.

"என் வாழ் நாளெல்லாம் தேடியும் கிடைக்காத பாக்கியம், சுல்தானுக்கு எளிதில் கிட்டியிருக்கிறதே. விட்டலனே நேரில் வந்து காட்சியளித்திருக்கிறானே".

தாமாஜி வேலையை விட்டார். பண்டரிபுரத்தில் கடைசி மூச்சிருக்கும் வரை விட்டல நாம சந்கீர்த்தனத்திலேயே ஈடுபட்டார் என்று தான் உங்களுக்கே தெரியுமே, நான் எதற்குச் சொல்லவேண்டும்!

 



                                                                            The writer can be reached at: jksivan@gmail.com
 

Thursday, 14 March 2013

விட்டலன் கதை 33

ராமாயணம் முடிந்தது
by J.K. Sivan



Sant Eknath Maharaj

ஏகநாதர் ஒரு ஞானி, மராத்திக்காரர். கிருஷ்ணன் பாண்டுரங்கன் என்றால் போதும் அன்ன ஆகாரம் வேண்டாம். அந்த அளவு பக்தி மிக்கவர். அவரை பற்றி எண்ணற்ற அற்புத விஷயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை இன்று உங்களிடம் உதிர்த்து விடுகிறேன். அவர் வசித்த ஊரிலேயே கிருஷ்ணதாஸ் என்று ஒரு வயதான பிராமண பண்டிதர் இருந்தார். அவருக்கு ஜோசியத்தில் அபார நம்பிக்கை. தனது வாழ்நாள் பூரா நிறைய ராமனை பற்றி விஷயங்கள் சேகரித்து ஒரு அருமையான ராமாயணம் எழுத கொள்ளை ஆசை கிருஷ்ணதாசுக்கு. வருஷக் கணக்காக சேர்த்த விஷயங்களை எழுத ஆரம்பித்து விட்டார். கிட்டத்தட்ட முடியும் தருவாய் அந்த ராமாயண கதை. இந்த நேரத்தில் தானா அவருடைய ஜோசியர் குரு அவரை பார்க்க வரவேண்டும்! அந்த ஜோசியர் சாமான்யர் அல்ல. சொன்னால் சொன்னதுதான் நடக்கும் என்றால் நடந்துவிடும், நடக்காதென்றால் என்றால் தலை கீழே நின்றாலும் அது நடக்காது. கிருஷ்ணதாசர் அவரிடம் தான் எடுத்துக்கொண்ட முயற்சி பற்றி சொல்லி "குருஜி, இன்னும் ஒரு 15 நாளில் ராமாயணம் எழுதி முடிந்துவிடும்" என்றார். ஜோசியர் சிரித்தார்.
ஏன்?”
ராமாயணம் முடிவது இருக்கட்டும். நான் வந்ததே உன்னிடம் ஒரு முக்ய விஷயம் சொல்ல தான். உன் ராமாயணம் முடிவதற்குள் நீ முடிந்துவிடுவாயே!”
என்ன சொல்கிறீர்கள்,சுவாமி?
"க்ரிஷ்ணதாசா, உனக்கு ஆயுசு இன்னும் மூணு நாள் தான் இருக்கு"

கிருஷ்ணதாசுக்கு பெரிய ஷாக். தன்னுடைய ராமாயணத்தை முடிக்க வேண்டுமே. என்ன பண்ணுவது என்று யோசிக்கும்போது தான் "அடாடா ஏக நாதரை மறந்தே போனேனே என்று தோன்றியது. ஓடினார் ஏகனாதரிடம். "அய்யா, ஒரு உபகாரம் பண்ணவேண்டும்"

"என்ன சொல்ல்லுங்கள், விட்டலன் அருளில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்"

கிருஷ்ணதாசர் கண்ணீரால் அவர் பாதங்களை அபிஷேகம் பண்ணிவிட்டு "சுவாமி எனக்கு
ஒரு அபிலாஷை. என் வாழ்நாள் பூரா சேகரித்த விஷயங்களோடு என்னுடைய இராமாயண புஸ்தகம் எழுதி முடிக்கப்பட வேண்டும்"
எழுதுங்களேன்
எப்படி அய்யா எழுதமுடியும் இன்னும் மூணேநாளில் நானே முடிந்துவிடுவேனே. நீங்கள் தான் மீதியை எழுதி முடிக்க வேண்டும்
எனக்கு உன்னை மாதிரி எல்லாம் எழுத தெரியாதே. நீயே எழுதப்பா
மூணு நாளில் முடியாதே.
சரி எத்தனை நாள் தேவை?”
குறைந்தது 12 நாளாகவாவது அவசியம்.
சரி, நீ எழுத ஆரம்பி"

கிருஷ்ணதாசர் ஏகநாதர் ஆஸ்ரமத்திலேயே தங்கி எழுதி தள்ளினார். 13 நாள் ஆகியது எழுதி முடிக்க. பரம திருப்தி அவருக்கு. எழுதியதை எல்லாம் ஏகநாதர் காலடியில் வைத்து வணங்கினார். எழுந்திருக்க வில்லை அவர்.

ஜோசியர் சொன்ன மூணு நாள் பதிமூணு நாளாக மாறியிருந்தது. ஜோசியம் பொய்க்க வில்லை. விட்டலன் ஏகநாதருக்காக 10 நாள் தள்ளி போட்டிருந்தான் அவ்வளவுதான்.

 
 
                                                                        The writer can be reached at: jksivan@gmail.com 
Inculcate Krishna Bhakti in Your
 
Children


If a child is properly trained in Krishna bhakti, he is better equipped to deal with the material world successfully than any non-devotee child because he will have a perfect understanding of how both the material energy and the spiritual energy are working. In this connection, the Bhagavad-gita 18.78 affirms:

yatra yogeśvaraḥ kṛṣṇo
yatra pārtho dhanur-dharaḥ
tatra śrīr vijayo bhūtir
dhruvā nītir matir mama

"Wherever there is Krishna, the master of all mystics, and wherever there is Arjuna, the supreme archer, there will also certainly be opulence, victory, extraordinary power, and morality. That is my opinion."

Therefore, with complete confidence, Krishna conscious parents should see that their children are perfectly trained in Krishna Bhakti.
***

Re-establish relationship with Krishna

 

No matter what is our age or our condition of health,
every one is situated on the verge of death. By the
inexorable laws of nature any one of us can be kicked
out of our present body at any moment. Therefore,
instead of basing our happiness on how we will enjoy
this material world, we should base our happiness on
re-establishing our lost loving relationship with Lord
Sri Krishna, the Supreme Personality of Godhead.
Only this will bring us genuine, lasting happiness.
***
 

Monday, 11 March 2013

Engage in Krishna-karma

No work should be done by any man except in relationship to Krishna. This is called krishna-karma. One may be engaged in various activities, but one should not be attached to the result of his work; the result should be done only for Him.

For example, one may be engaged in business, but to transform that activity into Krishna consciousness, one has to do business for Krishna. If Krishna is the proprietor of the business, then Krishna should enjoy the profit of the business. If a businessman is in possession of thousands and thousands of dollars, and if he has to offer all this to Krishna, he can do it. This is work for Krishna.

Srila Prabhupada in Bhagavad-gita As It Is (BG 11.55)

***