Translate

Tuesday 26 February 2013

My Spiritual Master writes
Go Out and Make the World Krishna Conscious


Our spiritual master, His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada, has given us the seemingly impossible duty of making the entire world Krishna conscious.

He told us, his disciples, on 17 December 1973 in Los Angeles, "Become guru and deliver the whole world." But what we can do on our own? We are a small number of souls struggling to awaken the entire human population to Krishna consciousness.

On our own, there is no way that we can be successful in carrying out this mission. But if you, and more and more others like you, will now step forward to dedicate your lives to this mission, there is substantial hope that we can be successful.

So kindly now step forward and offer yourself as the dedicated servant of the Krishna consciousness movement. This is our humble request.

Whatever talents and opulences you possess are the gifts of Krishna. So now, kindly engage these gifts in the service of Krishna who blessed you with them. 

In this way your talents and opulences will increase. You will become unlimitedly happy, and the entire world will become happy.


Sankarshan Das Adhikari

My Spiritual Master can be reached at: sda@backtohome.com. For an ecstatic e-course in self-realization through pure Krishna Bhakti, please enrol with Him at: www.ultimateselfrealization.com
 

Chant Hare Krishna,
the Maha-mantra for this Age


If I base my happiness on material happiness, I am sure to be disappointed because it is only temporary. We should instead find our happiness on the transcendental platform where it can never be touched by the dualistic nature of material existence.

The easiest way to attain this transcendental platform is through the ancient science known as mantra yoga. "Mantra" means a transcendental sound vibration that liberates your mind from the dualities of material existence and allows you to enter into the eternal transcendental dimension of bliss and knowledge. There are thousands and millions of suitable mantras.


It is recommended in the Kali Santarana Upanisad that in this age of Kali, the most suitable mantra is the Mahamantra, the Great Chanting for Deliverance. It goes like this:

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare



If you will chant it regularly, you will taste a sweet transcendental flavor that will completely liberate you from the dualities of material existence. For the maximum results you should chant it 24 hours daily or as much as you can squeeze into your daily schedule.


Give up all frivolous activities and focus your energy as much as possible on reviving your dormant Krishna consciousness. Happy chanting!

***
விட்டலன் கதை 25
நவாபுக்கு சேவகம்
by J.K. Sivan

Sant Sena Nahvi
தோண்டத் தோண்ட சுரக்கும் சில ஊற்றுக்கண்கள் கொண்ட கிணறுபோன்றது விட்டலன் மகாத்மியம். எண்ணற்ற குட்டிக் கதைகளை உங்களுக்கு வாரி வழங்க இதுவரை அருள்புரிந்த பாண்டுரங்கன் இனியும் நமது முயற்சிக்கு உதவ வேண்டிக்கொண்டு, இன்றைய கதை தொடங்குகிறேன்.
சேனாயி ஒரு முடி திருத்தும் நாவிதர் ஆக இருந்தும் விட்டலன் பக்தர். தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன், ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார். மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம்.

அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை முகலாயர்கள் ஆண்ட நேரம் அல்லவா? பந்தர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் முகல் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக பண்டரிபுரத்தில் இருந்தான். அவனுக்கு ஒரு பிரத்யேகமான நாவிதன் தேவை. ஒரு நல்ல ஆள் கிடைத்தால் அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப செலவுகளையும் ஏற்று, சவுகரியமாக வைத்துக்கொள்வதாக அறிவிப்பு வந்தது. நவாபிடம் நாவிதனாக உள்ளவன் மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது. இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்துகொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை. அவ்வளவு தானே?
நிறைய நாவிதர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டார்கள். சேனாயிக்கு இது தெரியாது. தெரிந்துகொள்ள எந்த முயற்சியோ போட்டியோ இல்லை. விட்டலன் அருளால் இந்த உத்தியோகம் சேனாயிக்கு மட்டும் கிடைத்தது. இதில் என்ன சந்தோஷம் அவருக்கு என்றால் காலையில் சிறிது நேரம் மட்டும் தான் வேலை. மற்ற நேரமெல்லாம் வீட்டில் பாண்டுரங்கனோடும் மற்ற பக்தர்களோடும் விட்டலனைப் பாட நிறைய நேரம் கிடைக்குமல்லவா?

மனிதனாகப் பிறந்தாலே போட்டி, பொறாமை,வயிற்றெரிச்சல் இல்லாமல் இருக்குமா? மற்ற நாவிதர்களுக்கு "இந்த சேனாயிக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா? எப்போ நமக்குக் கிடைக்கவில்லையோ, இவனை எப்படியாவது இந்த வேலையிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று வழி தேடிக்கொண்டிருந்தனர். சமயம் வந்தது லட்டு மாதிரி அவர்களுக்கு.

ஒருநாள் ஏகாதசி. நிறைய பாண்டுரங்க பக்தர்கள் வெளியூரிலிருந்து கூட்டமாக பஜனை ஆட்டம் பாட்டத்துடன் பண்டரிபுரம் விட்டலனை நோக்கி நடந்துகொண்டிருப்பதை சேனாய் பார்த்து விட்டார். அவர்களது தீஞ்சுவை விட்டலகானம் அவரைக் கவர்ந்தது. அவரையறியாமல் தலை, கால், கை எல்லாம் அந்த பக்தி ரசத்தில் ஆடி அவரை தன்னை மறக்கக் செய்தது. அந்த நேரம் அவர் நவாப் மாளிகைக்கு பணி புரிய சென்றுகொண்டிருந்தார். சேனாய் அப்படியே அவர்களோடு பண்டரிபுரம் கிளம்பிவிட்டார். அவருக்கு வீடு வாசல், நவாப், அன்றைய வேலை எல்லாமே சுத்தமாக மறந்துபோனது.

இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒருவன், நல்ல சமயத்தை நழுவவிடுவானா? நேராக நவாபிடம் சென்றான். அவர்கள் என்ன பேசினர்?

"அய்யா. நவாப்மகராஜ் தென்டனிடறேனுங்க

"யார் நீ என்ன விஷயம்?”

"அய்யா, இன்னிக்கு சேனாய் வரமாட்டானுங்க

 ஏன்?”

"பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்குப் போகப்போறேன் என்று சொன்னானுங்க"

"அங்க என்ன?

"எங்க சாமியிருக்கு. அது தான் முக்கியம். நவாப் இல்லை. அதனாலே இன்னிக்கு நவாபை போய்ப் பாக்கமாட்டேன்" வேணா நீ போய் அவன்கிட்ட சொல்லிடுன்னு சொன்னதாலே நான் சொல்ல வந்தேங்க"

நவாபுக்கு, கோவம் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை எகிறி, ஆட்களை ஏவி “அந்த சேனாய் நாயைக் கட்டி இழுத்துவா இங்கே, நானே அவனை வெட்டறேன்" என்றான். சொல்லி சில நிமிஷங்கள் கூட ஆகவில்லை. அவன் எதிரே சேனாய் வழக்கம்போல கைகட்டி சேவகத்துக்கு நின்றுகொண்டிருந்தார். நவாபுக்கு தன்னிடம் வேண்டுமென்றே யாரோ தப்பாகத் தகவல் சொல்லியிருக்கிறான் என்று தோன்றியது.

அவன் எதிரே அமர்ந்து வழக்கம் போல சேனாய் முடிதிருத்தும்போது இன்று என்றுமில்லாத ஒரு சந்தோஷம் நவாபுக்கு ஏற்பட்டது. ஒவ்வொருமுறை நவாபை தொட்டும், நேரே பார்த்தும் வேலை செய்யும்போது அவனுக்கு மனமெல்லாம் ஒரு அமைதி, சொல்லவொண்ணா களிப்புத் தோன்றியது. நவாப் இன்ப வானில் பறந்துகொண்டிருந்தான்.

சேனாயி! இன்று உன் வேலை பிரமாதம்! என்ன அப்படி இன்று விசேஷம் என்று கேட்டுக்கொண்டிருந்தபோது அவன் முன் விட்டலனின் அழகிய முகம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. காந்தக் கண்கள், புன்முறுவல், செந்தாமரை முகம், கஸ்தூரி திலகம் அனைத்தும் அவனை புளகாங்கிதமடைய செய்தது.

அந்தநேரம், சேவகர்கள் சேனாயியை கட்டி இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினர். திகைத்த நவாப் எதிரே இதுவரை இருந்த சேனாயியைத் தேடிய போது அவன் இல்லை.

இதற்குள் சேநாயி வேலைக்கு கிளம்பும்போது வழியில் பாண்டுரங்க பக்தர்களை பார்த்தது, வேலையை மறந்து அவர்களோடு பண்டரிபுரம் சென்றது, பாதிவழியில் சேவகர்கள் அவனைப் பிடித்து, கட்டி இழுத்து வந்தது அனைத்தும் சொல்லப்பட்டாலும் நவாபின் காது தான் இதைக் கேட்டதே தவிர, அவன் விட்டலனே தன் முன் தோன்றி தனது பக்தனின் வேலையை செய்தான் என்று புரிந்துகொண்டான்

நாமும் ஒன்று புரிந்துகொள்வோம். செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியும். தொழில் தெய்வமானால் தொழிலாளியும் தெய்வம் தானே! ஆனால் சேனாய் கதையில் தெய்வமே தொழிலாளி ஆகியிருக்கிறது!

 
                                                  The writer can be reached at: jksivan@gmail.com 

Monday 25 February 2013

Chant Krishna's Names and Experience Eternal Bliss


 
There is nothing more enchanting than chanting the holy names of Krishna because through the process of chanting under the guidance of the bona fide spiritual master, one is directly connected with Krishna, the source of everything.

Since when one is connected with Krishna, he is connected with everything, through chanting, one can experience everything wonderful that can be experienced anywhere throughout all of existence.

Understanding the amazing benefits of chanting Krishna's names, what sane person anywhere throughout the entire world would not want to chant?
Chant
 
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare
 
and attain transcendental bliss.

***

Saturday 23 February 2013

விட்டலன் கதை 24

பிராயச்சித்தம்
by J.K. Sivan
கோரா பற்றற்ற துறவியாக மனைவி விட்டலனின் மேல் வைத்த ஆணைக்குக் கட்டுப்பட்டு அவள் விரல் நுனி கூட தன் மீது படாது ஒரே வீட்டில் வாழ்ந்த நிலையில் அவருக்கு அவர் மனைவி சாந்தி, தன் தங்கை காமியையும் கல்யாணம் செய்து வைத்து, இருவரையும் "ஒன்றாகவே நடத்துங்கள் என்று அவள் தந்தை வேண்ட, வாக்குக் கொடுத்த கோரா, காமியையும், சாந்தி போலவே பாவித்து அவள் தன்னைத் தொடாமல் பார்த்துக்கொண்டார்!

தலைவலி போய் திரும்பி திருகுவலியாக வந்த நிலையில் காமியும், சாந்தியும் பலநாள் யோசித்து ஒருநாள் இரவு கோரா தூங்கிக் கொண்டிருக்கும்போது ஆளுக்கொரு பக்கமாக அவர் அருகில் படுத்து அவர் இரு கைகளையும் எடுத்து ஆளுக்கு ஒன்றாக தம் மீது போட்டுக்கொண்டனர். தூக்கம் விழித்து எழுந்த கோராவுக்கு தூக்கி வாரிப் போட்டது. தன் கைகள் அவர்கள் இருவரையும் தொட்டது கண்டு துடித்துப் போனார். விட்டலின் மேல் இட்ட ஆணையை மீறுவது என்பது விட்டலனையே அவமதித்தது போல் அல்லவா ஆகிவிடும். மீறியாகிவிட்டதே. இப்போது. என்ன தண்டனை இந்த அபராதத்துக்கு? முடிவெடுத்து விட்டார் கோரா.

ஆணை மீறிய தன்னுடைய அந்த இரு கைகள் இனி இருக்கக் கூடாது. வீட்டின் உள்ளே சென்று தேடினார். ஒரு கூரான கத்தி கண்ணில் பட்டது. விட்டலனை மனதில் நினைத்தார். கண்களில் நீர் ஆறாகப் பெருக, கண் இமைக்கும் நேரத்தில் இரு கைகளும் துண்டாயின. சகோதரிகள் அழுது தீர்த்தனர். தம்முடைய முட்டாள் தனத்தால் அவர் கைகள் இழக்கக் காரணமாகிவிட்டோமே என்று அவர் காலருகில் விழுந்து தம்மை மன்னிக்க வேண்டினார்கள்.

"அவன் மேல் இட்ட ஆணை மீறப்பட்டதால் விட்டலன் தானே மன்னிக்க வேண்டும் வாருங்கள் அவனிடம் செல்வோம்!" பண்டரிபுரம் சென்று விட்டலனிடம் மன்னிப்புக் கேட்க மூவரும் சென்றனர். அன்று ஆடி ஏகாதசி ஆகையால் எண்ணற்ற பாண்டுரங்க பக்தர்கள் குழுமியிருந்தனர் பண்டரிபுரத்தில். சந்திரபாகா நதியில் நீராடி அவர்கள் பாண்டுரங்கன் சந்நிதியில் நின்றபோது தெய்வீகமான ஒரு குரல் அபங்கங்களைப் பாடிக்கொண்டிருந்தது. ஆம். நாமதேவர் தான் தம்மை மறந்தநிலையில் பாண்டுரங்கனோடு இசையில் ஒன்றியிருந்தார். அருகில் ஞானேஸ்வர், நிவ்ரித்தி நாதர், முக்தாபாய் போன்ற பரம பக்தர்களும் விட்டலன் பஜனையில் கலந்து பேரானந்தத்தில் மூழ்கியிருந்தனர்.

அபங்கங்கள் விட்டல் பஜனையில் பாடும்போது பாகவதர்கள், ரசிகர்கள், பக்தர்கள் அனைவரும் சேர்ந்தும் பாடவேண்டும். பஜனைக்கு தக்கவாறு ஆடுவதும், தலையசைப்பதும், கைகளைத் தட்டுவதும் வழக்கம். அன்றும் அப்படியே அனைத்து பக்தர்களும் நாமதேவர் "கை தட்டி அனைவரும் பாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டபோது அவ்வாறே கர ஒலி எங்கும் வியாபிக்க, கோரா தன்னை மறந்த நிலையில் தன் கைகள் இல்லை என்ற நினைவே இல்லாமால் கைகளைத் தட்டிப் பாட முயற்சித்தபோது. அவர் கைகளிலிருந்தும் ஒலி எழுந்ததே! என்ன ஆச்சர்யம்! இழந்த கைகளை விட்டலன் திரும்ப இணைத்து விட்டானே!

விட்டலா,விட்டலா என்னே உன் மகிமைஎன்று எல்லோரும் வியந்து போற்றினர். கண்ணெதிரே ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறதே! வெட்டுண்ட இரு கைகளுடன் வந்த கோரா எப்பேர்ப்பட்ட பாண்டுரங்க பக்தர் என்று உணர்ந்தனர். நாமதேவர் அவர் காலடியில் விழுந்தார்.

சாந்தி கதறினாள்."விட்டலா உன் பெருமை தெரியாமல் உன்னை ஏசி விட்டேனே. என் குழந்தை இறந்த துக்கத்தில் அறிவின்றி உன்னைப் பழித்ததை மன்னித்து விடு. எனக்கருள் செய்." “எனக்கு குழந்தை இல்லையே என்ற துக்கம் அவ்வாறு செய்யத் தூண்டியது" எனக் கதறினாள்

"அம்மா!" என்று அவள் இடுப்பருகில் ஒரு சிறு குரல் கேட்டதும் திடுக்கிட்டாள். சிரிப்பால் அவளை மயக்கியவாறே அவர்கள் குழந்தை அவள் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நின்றது. விட்டலா! விட்டலா! என்ற பக்தர்கள் குரல் வானைப் பிளக்க, ருக்மணி, சாந்தியிடம் "உன் ஆணை இனி செல்லாது. எனவே நீங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கோராவுக்கு பணிவிடை செய்யுங்கள்" என்று சாந்தி, காமியை வாழ்த்தி அருளினாள்

பண்டரிபுரத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் தெர்தொகி என்கிற ஊரில் கோராவின் சமாதி இன்றும் உள்ளது. அது அவர் வாழ்ந்த கிராமம். அங்கு குழந்தை மிதிபட்ட இடம் காட்டப்பட்டுள்ளது.




                                               The writer can be reached at: jksivan@gmail.com