Translate

Thursday 31 January 2013

விட்டலன் கதை 13

யாத்திரை
by J.K. Sivan
பல புண்ய க்ஷேத்ரங்களுக்கு யாத்ரை சென்று போகுமிடமெல்லாம் மக்களை பக்தி மார்கத்தில் ஈடுபடுத்தி வந்த ஞானேஸ்வர் ஒரு முறை பண்டரிபுரம் வந்து நாமதேவரை சந்தித்தார். இரு பாண்டுரங்க பக்தர்களும் மனமார தழுவி அளவளாவினர்."உங்களை தரிசிக்கவே இங்கு வந்திருக்கிறன். நாட்டின் பல பாகங்களுக்கு யாத்ரை செல்ல விருப்பம். அங்கெல்லாம் இறைவன் கோயில் கொண்டுள்ள க்ஷேத்ரங்களில் தரிசனம் செய்து நாம சங் கீர்த்தனத்தை பரப்ப ஒரு எண்ணம் நீங்களும் என்னோடு வரலாமே" என்று ஞானேஸ்வர் கேட்டார்
"என்னால் பண்டரிபுறம் விட்டு நகரமுடியாது. விட்டலனை பிரிந்து ஒரு கணமும் இருக்க இயலாது"
"அயோத்யா பிருந்தாவன் மதுரா எல்லாம் செல்லபோகிறேன் அங்கெல்லாம் நாராயணனின் அவதாரமான ராமன் கிருஷ்ணன் இருந்து வளர்ந்த க்ஷேத்ரங்கள் உள்ளனவே கண்டு களிக்கலாமே".
"இன்றும் இங்கே பக்தர்களோடு சேர்ந்து அன்றாடம் மகிழ்விக்கும் விட்டலனை விட்டு அவன் எப்போதோ எந்த அவதாரமெடுத்து வாழ்ந்த இடங்கள் எனக்கு வேண்டாமே" என்றார் நாம்தேவ்.
"எனகென்னமோ நீங்களும் வந்தால் எனது யாத்ரை மிக்க மகிழ்ச்சி அளிக்கும் என்று எண்ணம்"
"விட்டலன் சரியென்றால் எனக்கு வர சம்மதம். அவனையே கேளுங்களேன்."

ஞானேஸ்வர் விட்டலன் சந்நிதிக்கு சென்றார்.
"விட்டலா உன்னிடம் ஒன்று கேட்க வந்திருக்கிறேன்"
"என்ன ஞானேஸ்வர் கேட்கப்போகிறாய்?"
"நாமதேவர் என்னோடு வர உனது அனுமதி தருவாயா?"
"என்னை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாயே. உன்னோடு நாமதேவர் சென்றால் பல இடங்களில் பக்தர்கள் மகிழ்வர் என்பது கண்கூடு, வாஸ்தவம். ஆனால் என்னால் அவரை இந்த விட்டலனுக்கு அவரை விட்டு பிரிந்திருக்க இயலாதே?' என்ன செய்வது, சரி, நீங்கள் சொல்வது போல் செய்கிறேன்"

விட்டலன் கண்களில் நீரோடு நாமதேவரை கூப்பிட்டு "ஞாநேஸ்வரோடு யாத்ரை செல்லுங்கள்" என அனுமதியளித்தான்.

அவர்களது யாத்ரானுபாவம் பற்றி தெரிந்து கொள்ள அடுத்த குட்டி கதையைத் தான் தேட வேண்டும்!



The writer can be reached at: jksivan@gmail.com

 
Who Is Krishna? ..... (9)
 
Krishna is devoid of discrimination as of kinship (63.38, 44)

Krishna is Existence (56.27)

Krishna possesses true desires (80.44)

Krishna is the True Entity (87.17)

Krishna is True of speech (48.26)

Krishna is True of resolve (37.12)

Krishna sees with an equal Eye (16.33)

Krishna is the Cause of all causes (14.56-57, 63.38, 87.16)

Krishna is the Originator of all (59.28)

Krishna is the Soul’s own self of all jivas (individual souls) (14.55)

Krishna is Omniscient (16.48)

Krishna is All-seeing (38.18)

Krishna is the Embodiment of all gods (74.19, 86.54)

Krishna is the Seer of all (16.48)

*** 

Wednesday 30 January 2013

Who Is Krishna? ..... (8)




Srimad Bhagavatam describes Krishna in its Canto 10

Krishna wears Forms in accordance with the wishes of His devotees (59.25)

Krishna is etertnally Present in Mathura (1.28) .

Krishna is devoid of the sense of kinship and regards all in the same way (46.37).

Krishna is beyond all Measuring Potency (Maya) (63.26)

Krishna is subdued by the love of Judhisthira (72.10).

Krishna is concealed by the screen of Maya from the sight of the people 84.23).

Krishna does not follow the ways of the world (60.36).

Krishna is the Destroyer of the fear of the mundane sojourn of the submissive. (85.19).

Krishna is the Womb of the Scriptures. (16.44, 80.45, 84.20).

Krishna is Sree Guru’s Own Self (80.33).

Krishna is devoid of hankering for wife, offspring, etc. (60.20).

Krishna is of the Ordainer of the worldly sojourn and of the summon bonum (1.7).

Krishna is the friend of the good (69.17).
***
Krishna Is Non Sectarian
A Muslim woman carries her son,dressed as Lord Krishna,
on the occasion of Janamashtami
This picture is a reminder of the situation in which the Gopis of Vrndavan found themselves. Even though cultural, social and even religious constraints we forced upon them, they (pure spirit souls) called out with love for Sri Krishna and He responded. 
Everyone can love Sri Krishna
because Sri Krishna loves everyone !

Picture and text courtesy: www.dharmakshetre.com
 
விட்டலன் கதை 12

சித்து விளையாட்டு
by J.K. Sivan



ஞானேஸ்வரின் ஸாஸ்த்ரானுபவம் பற்றியும் அவரது பிரம்மஞானம் பற்றியும் அறிந்தோமல்லவா? அவர் பகவத்கீதைக்கு மராத்தியில் மிக சிறந்த, இன்றும் அனைவராலும் போற்றப்படும் ஞானேஸ்வரி என்ற உரை எழுதியிருக்கிறார். சகோதரர்களுடனும் இளம் சகோதரி முக்தாபாயுடனும் அவர் பைதானில் வசித்தபோது, ஒரு தடவை அந்த ஊருக்கு ஒரு ஹட யோகி வந்தார் அவர் பெயர் சங்கதேவ். அவர் வயது 1000 கடந்தது என்று ஊரில் பேச்சு, நீரில் நடப்பாரம், காற்றில் பறப்பாராம், நெருப்பில் குதித்து விளையாடுவாராம்! ஏன், "செத்தவனையும் பிழைக்க வைக்க என்னால் முடியும்" என்று அவர் சொல்லி ஊரே அவர் வீட்டுமுன் திரண்டது.
காட்டுத் தீ போல் செய்தி பரவி அண்டை அசல் ஊர்களிலிருந்தெல்லாம் பிணங்களைத் தூக்கி கொண்டு வந்ததால் பைதான் பூரா உயிருள்ளவர்களை விட உயிரற்றோரின் எண்ணிக்கை அதிகமாகியது! சங்கதேவின் சக்தி எல்லோரையும் அதிர வைத்தது. இறந்தவனுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது என்ன சின்ன விஷயமா?!! இருந்தபோதிலும் சங்கதேவுக்கு ஒரு உறுத்தல் மனதில் இருந்துகொண்டு அவரை அரித்து கொண்டிருக்க, எல்லோரிடமும்யார் அந்த ஞானேஸ்வர்? எதற்கு மக்கள் அவரிடம் சென்று குழுமுகிறார்கள்? அவர் பிரசங்கத்திலோ பாடும் அபங்கத்திலோ அப்படி என்ன ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது?? என்று ஏளனம் செய்தார். இது ஞானேஸ்வர் காதில் விழுந்தும் அவர் லட்சியம் செய்யவில்லை.
அவர் இளம் சகோதரி முக்தாபாய்க்கு இது பிடிக்காமல் நேரே சங்கதேவ் வீடு சென்ற போது அங்கு ஜே ஜே என்று கூட்டம். ஒரு பிணம், அதை சுற்றி உறவினர்கள் பொது மக்கள். சங்கதேவ் வெளியே வந்து அதற்கு உயிர் கொடுக்க எல்லோரும் ஆவலாக காத்திருந்தனர்.
5 வயது பெண்ணாகையால் "இங்கு நிற்காதே போ. இதை பார்த்து பயப்படுவாய்? " என விரட்டினர்.
"என்ன நடக்க போகிறது இங்கே?"
" இதோ இந்த இறந்த மனிதன் பிழைக்க போகிறான். நீ முதலில் கிளம்பு" என்று விரட்டினர்.
"ஏன். நானே கூட இவரை பிழைக்க வைக்க முடியுமே " என்று சொல்லியவாறு அந்த சிறுமி கீழே கிடந்த பிணத்தின் காதருகே சென்று "விட்டலா விட்டலா என்று சொல்லி “எழுந்திரு” என்றவுடன், அந்த உடல் உயிர் பெற்று எழுந்து "விட்டலா விட்டலா" என்று பாடிக்கொண்டு ஓடியது.

இந்த அதிசயம் கண்டு ஊர் மக்கள் ஆடிப்போய் முக்தாபாய் பின் சென்றனர்.
“என்ன சத்தம் அங்கே” என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்த சங்கதேவுக்கு விஷயம் எட்டியது.
"யார் அந்த பெண்"?
"ஞானி ஞானேஸ்வரின் குட்டி தங்கை."
அதிர்ச்சியுற்ற சங்கதேவ் உடனே ஞானேச்வரை பார்க்க கிளம்பினார். எப்படி? தனது மந்திர சக்தியில் ஒரு புலியை உருவாக்கி, அதன் மேல் அமர்ந்தவாறு! கூட்டம் அலைமோத, அவர் பவனி ஞானேஸ்வர் ஆஸ்ரமம் வரும் சமயம், ஞானேஸ்வர் ஆஸ்ரம சுவரின் மேல் அமர்ந்து அதை கட்டி கொண்டிருந்தார்.

"சுவாமி உங்களை காண சங்கதேவ் புலிமேல் வருகிறார்"
"நானே சென்று அவரை காண்பது தான் முறை" என்று சொல்லியவாறு தான் உட்கார்ந்து கட்டிகொண்டிருந்த சுவருடன் பயணம் செய்தார் ஞானேஸ்வர்!
ஒரு சுவர் தானே நகர்ந்து அதன் மேல் இளம் வயதினர் ஞானேஸ்வர் அமர்ந்து வருவது கொண்டு பிரமித்து போனார் சங்கதேவ்.

புத்தி வந்தது அவருக்கு. புலியின் மீதிருந்து இறங்கி நேரே ஞானேஸ்வரின் காலடியில் விழுந்து "என்னை மன்னிக்க வேண்டும்" என்றார்.

"தாங்கள் பெரியவர் என் காலில் விழக்கூடாது. அபசாரம். அஷ்ட மகா சித்திகள் எல்லாம் அவசியமற்றவை. இறைவனை அடைய அவை தேவையல்ல. தவறான வழியில் கொண்டு செல்ல கூடியவை"
"நீங்களே என் கண் திறந்தீர்கள். என்னைச் சரியான பாதைக்கு வழிகாட்டி அருள வேண்டும்" என்று கெஞ்சிய சங்கதேவுக்கு "நீயே அவருக்கு வழிகாட்டு முக்தா" என்று சிறுமியிடம் சொன்னார் ஞானேஸ்வர்.

"இறை சிந்தனை, பகவான் பற்றிய கதைகள், நாம சங்கீர்த்தனம் - இவை மட்டுமே போதும் அவன் அருள் பெற" என்று முக்தாபாய் சங்கதேவுக்கு சொன்னது நம் காதிலும் விழட்டுமே!

  
The writer can be reached at: jksivan@gmail.com