Translate

Saturday 17 November 2012

மன மாற்றம்
by J.K. Sivan


 
பட்டாச்சாரியார் கோயிலில் ஒருவனை கண்டார் பக்தர்கள் நடுவிலே
ஒட்டுச்சட்டை கந்தலும் அழுக்குமாய் கண்ணன்முன்அவன் 
நின்றான்  
பகலில்  தினமும் உணவுப்பையுடன் வந்து வணங்கி சென்றிடும் அவனை

திகிலும  ஐயமும் கொண்டு வினவினார் "யாரப்பா நீ எங்கே உள்ளாய்
?

"
கூப்பிடு  தூரத்தில் தொழிற்சாலையில் பணி -   அங்கு

சாப்பிட   நேரம் அரைமணிஅதற்குள் என் நண்பனை காண வருவேன்
        
"
நண்பா , நலமா சாப்பிட வாயேன்"--  பேசி செல்வதில் உளமகிழ்வு
"
உண்மையில்  வேறு நண்பர் எனக்கிலை" - என அவன் பகர


இருபது  வருடம் இவனால் வாழ்ந்தும் இப்படி ஏனோ தோன்றவில்லை

திருமுன் வேதம் ஓதியும்
என்மனம் கண்ணனை ஏனோ நெருங்கவில்லை
மன்னித்தருள்வாய் மாதவாமாற்றிடுஎன்மனம் இதுமுதலாய் -
பட்டர் சென்னி,  கண்ணன் திருவடி பணிந்திட
கண் ணீர் கடலாய் கதறினின்றார் 
பல  நாள் சென்றது அவன் வருவதில்லை-
பட்டர் பதறி  ஓடினார்
சில மணி நடந்தவர் பட்டறை ஒன்றில்  அறிந்துகொண்டார்
உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்ந்தான்
என்பது புரிந்து கொண்டார்
கடன்பட்டவர்போல் பலமாடிகள் ஏறி கண்டுபிடித்தார் கூட்டத்திலே  
கண்டவர்  எல்லாம் புகழ்வதை கேட்டார்
மட்டற்ற மகிழ்ச்சியில் எவருமங்கே 
பெண்டாட்டி பிள்ளை சுற்றமென்றெவரும் வரவில்லை.
     எனினுமெப்போதும் உற்சாகத்துடன்
மற்றவர்க்குழைத்திடும் அவனை நேரில் கேட்டார்:
"உனக்காருண்டு?
"
உற்றிட்ட நோயுடன் வந்தநாள் முதல் மனம்
நண்பனை மட்டுமே  நாடியது 
உனை   கண்டு உறவாட உடலிடம் தரவில்லை
உள்ளத்தில்  மட்டுமே தேடுகிறேன்
எனை   காண அவன்  தினமும் பகல் பொழுதில் வருகின்றான்
" நண்பா நீ வர இயலவிலையெனில் நான் வந்து  காண்பேன்
கவலை கொள்ளாதே"
மறக்காமல் நாடோறும் வருகிறான்
நானும் இதரரும் மனமகிழ்கின்றோம்"
சிலையென னின்றார் பட்டர்பிரான்
" கண்ணா புனர்ஜன்மம் எடுத்தேன்
இலை   எனக்கினி வேறுமந்திரமொன்றும்".  
வந்தவழியே திரும்பினார்.
 
***
 

                                                  The writer can be reached at: jksivan@gmail.com


No comments:

Post a Comment